நேற்றைய தினம் இரவு ஆக்லாந்தில் Mt Roskill என்ற இடத்தில் ஒரு பெண் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

இந்நிலையில் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதை அடுத்து பின்னர் அவர் வீடு திரும்பியுள்ளார்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், இந்த பயங்கர சம்பவத்தை அடுத்து அவரது குடும்பத்தினர் தற்போது வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர் என தெரிவித்தார்.

இந்நிலையில் பொலிஸார் இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.