கடந்த மாதம் Taupō இல் நடந்த கும்பல் சண்டை தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜூலை 5 அன்று Taupō வில் உள்ள ஒரு வணிக நிலையத்தில் கும்பல் உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தற்போது 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 16 முதல் 31 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

வன்முறையை ஏற்படுத்தக்கூடிய ஒழுங்கீனமான நடத்தை மற்றும் தாக்குதல் ஆயுதம் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றங்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

"இது ஒரு வெட்கக்கேடான வன்முறைச் செயலாகும்" என்று துப்பறியும் சார்ஜென்ட் ஆண்டி லிவிங்ஸ்டோன் கூறினார்.

"கும்பல்களுக்கு இடையே நடந்து வரும் எந்தவொரு வன்முறைச் செயல்களையும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று எங்கள் சமூகத்திற்கு உறுதியளிக்க விரும்புகிறோம்." என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் Taupō இளைஞர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.