வெலிங்டன் விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் அனைத்து விமானங்களும் சீரற்ற வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

வெலிங்டன் விமான நிலையத்தில் அதிக காற்று வீசுவதால் பயண உடைமைகளை கையாளுபவர்கள் செயல்படுவது பாதுகாப்பற்றதாக உள்ளது.

மேலும் தகவலுக்கு பயணிகள் விமான நிறுவனங்களை நேரடியாகச் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

படகு பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன, மேலும் தெற்கு கடற்கரையில் ஏழு மீட்டர் உயர அலைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

சர்ஃபர்ஸ், நீச்சல் வீரர்கள், மீனவர்கள் மற்றும் சிறிய படகு உரிமையாளர்கள் கடலில் இருந்து விலகி இருக்குமாறு வெலிங்டன் பிராந்திய அவசரநிலை நிர்வாகம், கேட்டுக்கொள்கிறது.