Māhia வில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் மூன்று பேரை Hawke's Bay பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜூலை 12 அன்று வடக்கு Hawke's Bay குடியேற்றத்தைச் சுற்றி, ஒரே இரவில் 20 திருட்டுகள் நிகழ்ந்தன.

கான்ஸ்டபிள் சாட் ப்ரெண்டிஸ் கூறுகையில், குற்றவாளிகள் கருவிகள் மற்றும் வெளிப்புற உபகரணங்களை குறிவைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று Wairoa வில் உள்ள இரண்டு வீடுகளை பொலிஸார் சோதனை செய்து, மூன்று பேரை கைது செய்தனர்.

திருடப்பட்ட சொத்துக்களில் பெரும்பகுதி கண்டுபிடிக்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆனால் சில கருவிகள், மீன்பிடி கம்பிகள் மற்றும் கார் பேட்டரிகள் போன்ற சில பொருட்கள் அவற்றின் உரிமையாளர்களுடன் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

20 வயதுடைய இருவர் மற்றும் 17 வயதுடைய ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  அவர்கள் இந்த வாரம் Wairoa மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

இந்த விசாரணையில் வேறு யாரையும் பொலிஸார் தேடவில்லை என உறுதிப்படுத்தியுள்ளனர்.