ஆக்லாந்தின் North Shore இல் உள்ள வங்கியில் கொள்ளையடித்த நபரை பொலிஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமையன்று காலை 11.30 மணியளவில் Glenfield மாலில் இந்த கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது.

ஊழியர்களை அச்சுறுத்தி பணம் கொள்ளையிடப்பட்டதுடன் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்நிலையில் Waitematā காவல்துறையினர் பொதுமக்களின் அவசர உதவியை நாடியுள்ளனர்.

"இந்த நிகழ்வைக் கண்ட பொதுமக்களுக்கு இது பயமாக இருந்திருக்கும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இருப்பினும், இந்த சம்பவங்களை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம், மேலும் பொறுப்பானவர்களை கைது செய்வதில் உறுதியாக இருக்கிறோம்," என்று காவல்துறை அறிக்கை தெரிவிக்கிறது.

 சம்பவம் பற்றி தகவல் தெரிந்தவர்கள், 105 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அல்லது இணையதளத்தில் https://www.police.govt.nz/use-105 என்ற முகவரியில், Update My Report என்ற இடத்தில் கோப்பு எண் 220716/9306ஐப் பயன்படுத்தி காவல்துறைக்கு தகவல் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.