ஹமில்டனில் நடந்த கத்திக்குத்து  தாக்குதல் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹூட் தெருவில் நடந்த ஒரு தாக்குதல் சம்பவத்தின் போது 18 வயது இளைஞன் மார்பில் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

மேலும் அவர் தற்போது வைகாடோ மருத்துவமனையில் நிலையான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு அறிக்கையில், துப்பறியும் மூத்த சார்ஜென்ட் ரோஸ் பேட்டர்சன் கூறுகையில், இந்த சம்பவம் Market Place பகுதியில் அதிகாலை 2.25 மணியளவில் நடந்த ஒரு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக பொலிஸார் நம்புகிறார்கள்.

இந்நிலையில் 18 வயதான ஹமில்டன் நபர் ஒருவர் கத்திக்குத்து மற்றும் பிற தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.

அவர் நாளை ஹமில்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என தெரிவித்தார்.

இந்த நிகழ்வுகளை நேரில் பார்த்தவர்கள் அல்லது காணொளி பதிவு செய்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு 220717/0933 என்ற கோப்பு எண்ணை மேற்கோள் காட்டி தகவல்களை வழங்குமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.