ஆக்லாந்தின் புறநகர்ப் பகுதியான Mangere இல் உள்ள ஒரு வீட்டில் நள்ளிரவு 12.25 மணியளவில் ஜன்னல் வழியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை அடுத்து பொலிஸார் வருகை தந்தனர்.

இச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்றும், துப்பாக்கிச்சூட்டில் இதுவரை எந்த கும்பலுக்கும் தொடர்பு இல்லை என்றும் ஆக்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே பொலிஸார் இன்னும் அந்த இடத்தில் உள்ளனர், அங்கு காட்சி ஆய்வு நடந்து வருகிறது.