ஆக்லாந்தில் உள்ள Favona வில் ஒரு குடியிருப்பில் ஏற்பட்ட நபர் ஒருவரின் திடீர் மரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்

சம்பவ இடத்தில் இறந்த நபருக்கு தெரிந்தவர் என நம்பப்படும் நபரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும் என்ன நடந்தது என்பதற்கான சரியான சூழ்நிலைகளை கண்டறிய பொலிஸார் பணியாற்றி வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மேலதிக தகவல்கள் எதுவும் தற்போது கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.