கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வேறு நபர்களுக்கு மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதன்படி ,தேசிய வளங்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வது எமது அரசாங்கத்தின் கொள்கை அல்ல என்றும் அவர் மேலும் தெரிவுத்தார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இதனை பிரதமர் தெரிவித்தார்

மேலும் ,நாட்டின் தேசிய வளங்களை விற்று வருங்கால சந்ததியினரின் பாரம்பரியத்தை பறித்திருப்பது ஐக்கிய தேசிய கட்சி மற்றும் நல்லாட்சி அரசாங்கங்கள்தான் தவிர எமது அரசியல் கொள்கை இதுவல்ல என்றும் அவர் மேலும் கூறினார்.