இன்று நியூசிலாந்தில் 15,250 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 22 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நியூசிலாந்தில் இதுவரை கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 338 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தொற்றுகளில் ஆக்லாந்தில் 2708 பேரும், நோர்த்லேண்டில் 662 பேரும், வைகாடோவில் 1352 பேரும், Bay of Plenty இல் 825 பேரும், Lakes இல் 348 பேரும், Hawke's Bay இல் 917 பேரும், Mid Central இல் 812 பேரும், Whanganui இல் 360 பேரும், தரணகியில் 608 பேரும், Tairawhiti இல் 201 பேரும், Wairarapa வில் 146 பேரும், Capital and Coast இல் 1009 பேரும், Hutt Valley வில் 587 பேரும், Nelson Marlborough வில் 729 பேரும், Canterbury இல் 2379 பேரும், South Canterbury 305 பேரும், தெற்கில் 1212, West coast இல் 77 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் 26 பேர் உட்பட 830 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டின் எல்லையில் இன்று 48 கொவிட் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தொற்றுநோய் பரவல் தொடங்கியதிலிருந்து இதுவரை நியூசிலாந்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 642,447 ஆகும்.