அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் மற்றும் உப ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கமலா ஹாரிஸ்க்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதன்படி ,அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடனும் உப ஜனாதிபதியாக கமலா ஹாரிஸும் நேற்று பதவியேற்றனர்.

மேலும் ,இந்த நிலையில், அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தானும் தனது அரசாங்கமும் ஒரு வலுவான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் இருதரப்பு உறவை நோக்கி ஒன்றிணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.