மேற்கு பே ஆஃப் பிளென்டியின் (western Bay of Plenty) அமோகோரோவாவில் (Ōmokoroa) பணியிடத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று பிற்பகல் 1.15 மணியளவில் தமக்கு தகவல் வழங்கப்பட்டதாக அவசர சேவைகள் தெரிவித்தது.

இந்நிலையில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மற்றும் WorkSafe-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது