மத்திய ஆக்லாந்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் காயமடைந்தனர்.

அதிகாலை 1.45 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கிடைத்த தகவலை அடுத்து, Fort தெருவுக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் 18 வயது இளைஞன் கைது செய்யப்பட்டதை அடுத்து கடுமையான உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு இன்று ஆக்லாந்து மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.