பாராளுமன்ற வளாகத்தில் பொலிஸாரின் ஐந்து கார்கள் போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டதாக காவல்துறை கூறுகிறது.

பாராளுமன்றத்திற்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த மொபைல் ஷவரை அங்கிருந்து அகற்ற பொலிஸார் நடவடிக்கை எடுத்ததை அடுத்து அவர்கள் இவ்வாறு பொலிஸாரின் கார்களை சேதப்படுத்தி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஸ்டவுட் தெருவில் உள்ள ஷவர் பிளாக், நேற்று forklift மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை பொலிசார் ஒரு அறிக்கையில், போராட்டக்காரர்கள், பதிலடியாக, ஃபெதர்ஸ்டன் தெருவில் நான்கு பொலிஸ் வாகனங்களின் டயர்களையும், Aitken தெருவில் ஒரு வாகனத்தின் டயர்களையும் கழற்றியதாக தெரிவித்துள்ளனர்.

ஷவர் பிளாக் சட்டவிரோதமாக நிறுத்தப்பட்டதாகவும், அதை அகற்றும் நடவடிக்கை சுமார் 50 நிமிடங்கள் நீடித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் காவல்துறை வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டமை குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.