நெல்சன் இளைஞர் தகிமோனா ஏரியை கொலை செய்ததாக 30 வயது நபர் மீது பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.

22 வயதான Takimoana, கடந்த மாதம் 22 ஆம் திகதி Washington வீதியில் உள்ள ஒரு வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் நேற்றிரவு பொலிசார் ஒருவரைக் கைது செய்து, அவர் மீது கொலைக் குற்றம் சாட்டியுள்ளனர் என்று டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் மார்க் செனெரி கூறினார்.

அவர் இன்று நெல்சன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

மேலும் 24 வயதுடைய இளைஞன் கொலையில் ஈடுபட்டதற்காக முன்னர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.