கடந்த செவ்வாய்க்கிழமை நெல்சனில் சுட்டுக் கொல்லப்பட்ட‌ நபர் 22 வயதான அரிசோனா தகிமோனா ஏரி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தகிமோனாவின் நண்பர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகியோருக்கு பொலிஸார் இரங்கல் தெரிவிப்பதாக
டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் மார்க் செனெரி தெரிவித்தார்.

கொலை விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில் தகவல் தெரிந்தவர்கள் எவரும் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சம்பவ தினத்தன்று மதியம் 1.30 மணிக்கு சற்று முன் நெல்சனில் உள்ள வாஷிங்டன் வீதியில் உள்ள ஒரு குடியிருப்புக்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

அவசர சேவைகள் CPR உதவி வழங்கிய போதும் Takimoana சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மேலும் Takimoana மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் நபர் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்று
டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் மார்க் செனெரி கூறினார்.