இன்று மாலை ஆக்லாந்தின் SH16 இல் பல வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் எட்டு பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் St John ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வடமேற்கு நெடுஞ்சாலை, ரோஸ்பேங்க் மற்றும் பாடிகி சாலைகளுக்கு இடையே மூடப்பட்டுள்ளது மற்றும் ரோஸ்பேங்க் சாலைக்கு அருகில் மேற்கு நோக்கி செல்லும் பாதையில் விபத்து ஏற்பட்டது என்று Waka Kotahi NZTA தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

நெடுஞ்சாலையில் மேற்கு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரோஸ்பேங்க் சாலையில் திசை திருப்பி விடப்படுகிறது.

இதனிடையே வாகன சாரதிகள் கணிசமான காலதாமதத்தை எதிர்பார்த்து, அந்த பகுதியை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.