இன்று நெல்சனில் உள்ள குடியிருப்பில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, பொலிசார் கொலை விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

இன்று மதியம் 1.15 மணியளவில் நெல்சனில் உள்ள வாஷிங்டன் வீதியில் ஒரு குடியிருப்பில், ஒருவர் பலத்த காயம் அடைந்ததாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து பொலிஸார் வருகை தந்தனர்.

அதே நேரத்தில் ஒரு St John ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கையாக ஆயுதமேந்திய குற்றப்பிரிவு பிரிவு சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது.

அவசர சேவைகள் CPR உதவி வழங்கிய போதும் சிகிச்சை பலனின்றி அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

என்ன நடந்தது என்பதை கண்டறியவும், அதற்கு காரணமானவர்களை அடையாளம் காணவும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அல்லது சம்பந்தப்பட்டவர்களிடம் பொலிஸார் பேச விரும்புகிறார்கள்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்த எவரும் 105 என்ற எண்ணை அழைத்து 220222/7060 என்ற கோப்ப எண்ணை மேற்கோள் காட்டி தகவல்களை வழங்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.