ஓவிரோ (Owhiro) விரிகுடாவில் உள்ள ஹேப்பி பள்ளத்தாக்கு வீதியில் இன்று காலை இடம்பெற்ற பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலை 6.30 மணியளவில் குறித்த வாகன விபத்து குறித்து அவசர சேவைகளுக்கு தகவல் வழங்கப்பட்டது.

வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மூன்று பேர் மிதமான காயங்களுக்கு உள்ளாகினர்.

இந்நிலையில் காட்சி ஆய்வுகளுக்கு பிறகு, சாலை திறக்கப்பட்டது.