ரிமுதகா சிறையிலிருந்து தப்பியோடிய கைதி வெலிங்டனை விட்டு ஏற்கனவே வெளியேறி இருக்கலாம் என பொலிஸார் நம்புகிறார்கள்.

59 வயதான ஜோன் டக்ளஸ் வில்லிஸ் என்ற குறித்த கைதி நேற்று பிற்பகல் சிறையிலிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் எப்படி வெளியேறினார் என்பதை பொலிசார் தெரிவிக்கவில்லை, ஆனால் அவர் கடைசியாக 2008 மொடல் டொயோட்டா ஹைஸ் வேனை ஓட்டிச் சென்றதாகக் தெரிவித்தனர்.

இந்நிலையில் வில்லிஸின் இருப்பிடம் அல்லது விவரிக்கப்பட்ட வாகனத்தைப் பார்த்தது பற்றிய தகவல்களை அறிய பொலிஸார் தற்போது முறையிடுகின்றனர்.

எனவே தகவல் தெரிந்தவர்கள் 111 என்ற எண்ணில் காவல் துறையை அழைத்து கோப்பு எண் 220218/5736 ஐ மேற்கோள் காட்டி தகவல்களை வழங்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.