Meremere இல் உள்ள Whangamarino ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட அப்துல் கரீம் என்ற நபரின் கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆக்லாந்தைச் சேர்ந்த அப்துல் கரீமைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 35 வயதான குறித்த நபர் ஹமில்டன் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Māngere வை சேர்ந்த 40 வயதான கரீம், செவ்வாய்கிழமை பிற்பகல் மேரிமேரில் உள்ள வாங்கமரினோ ஆற்றில் இறந்து கிடந்தார்.

இந்த வழக்கு தொடர்பான தகவல்களுக்கு பொலிஸார் இன்னும் முறையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் செவ்வாய்கிழமை Island Block சாலையில் படகுப் பாதையைப் பயன்படுத்திய எவரிடமிருந்தும், மேலும் Island Block சாலை, ஐலண்ட் பிளாக் சாலைப் பாலம் மற்றும் வாங்கமரினோ நதி ஆகிய பகுதிகளில் சம்பவ தினத்தில் நண்பகல் முதல் மாலை 5 மணி வரை இருந்தவர்களிடம் பொலிஸார் தகவல்களை பெற விரும்புகின்றனர்.