Wairoa, Hawke's Bay இல் 1 கிலோவுக்கும் அதிகமான மெத்தாம்பேட்டமைன் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கும்பலைச் சேர்ந்தவர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் குறித்த பகுதியில் மெத்தாம்பேட்டமைன் விற்பனை மற்றும் விநியோகத்தை இலக்காகக் கொண்ட பொலிஸ் நடவடிக்கையின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பேர் Mongrelizm Mob, Barbarian கும்பல் உறுப்பினர்கள் மற்றும் மோங்க்ரல் கும்பலின்  உறுப்பினர்கள் ஆவர்.

சப்ளைக்காக மெத்தாம்பேட்டமைன் வைத்திருந்தது, மெத்தாம்பேட்டமைன் சப்ளை செய்தல், மெத்தாம்பேட்டமைன் சப்ளை செய்ய சதி செய்தல், பணமோசடி செய்தல் உள்ளிட்ட குற்றங்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் "Wairoa சமூகத்திற்கு பல கிலோகிராம் மெத்தாம்பேட்டமைனை வழங்குவதற்கான ஆதாரங்களையும் கைப்பற்றியுள்ளோம்" என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் கைதுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் இடம்பெறலாம் என எதிர்பார்ப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.