நேற்றிரவு ஆக்லாந்தின் உள்ள நகர மதுக்கடையில் ஏற்பட்ட மோதலின் பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

நேற்று இரவு 9.30 மணியளவில் கிங்ஸ்லாந்தின் நியூ நோர்த் வீதியில் உள்ள வர்த்தக வளாகத்தில் மோதல் நடப்பதாக தமக்கு தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

20 பேர் கொண்ட ஆயுதங்கள் ஏந்திய ஒரு குழுவினர் மதுக்கடைக்கு வந்து‌ வலுக்கட்டாயமாக உள்ளே நுழைய முயன்றுள்ளனர்.

பின்னர் அவர்கள் பார் பகுதிக்குள் பாட்டில்களை வீசத் தொடங்கிய நிலையில் உள்ளே இருந்தவர்கள் அதற்கு பதில் தாக்குதல் நடத்தினர்.

பின்னர் அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், ஆனால், இதற்குக் காரணமானவர்களைக் கண்டறிய விசாரணை நடத்தி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள், 105 என்ற எண்ணில் காவல் துறையை தொடர்புகொண்டு, 220206/3111 என்ற கோப்பு எண்ணை மேற்கோள் காட்டி தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.