ஆக்லாந்தின் வடக்கு கடற்கரையில் உள்ள புபுகே ஏரியில் (Lake Pupuke) ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் கடந்த செவ்வாய்கிழமை இரவு தனது நண்பருடன் நீராடச் சென்ற நிலையில் நீரில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நபரின் சடலத்தை நேற்றிரவு பொலிஸ் தேசிய நீர்மூழ்கிப் பிரிவினர் மீட்டுள்ளனர்.