ஆக்லாந்தின் வெலிங்டன் பகுதியில் இன்று காலை ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மவுண்ட் வெலிங்டன் நெடுஞ்சாலையில் உள்ள குடியிருப்பு முகவரியில் காலை 7.30 மணிக்கு முன்பு இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.

குறித்த நபர் ஆபத்தான நிலையில் ஆக்லாந்து நகர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில் இந்த கத்திக்குத்து சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.