நேற்று இன்வெர்கார்கிலில் Heidelberg இல் உள்ள ஒரு வீட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து இருவர் மருத்துவமனையில் தீவிர நிலையில் இருப்பதாக பொலிஸார் கூறுகின்றனர்.

திங்கட்கிழமை நள்ளிரவு 1 மணிக்குப் பிறகு இடம்பெற்ற குறித்த துப்பாக்கி சூட்டைத் தொடர்ந்து டன்னீடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 17 வயது பெண் மற்றும் 16 வயது ஆண் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் துப்பாக்கிச்சூடு ஒரு குறிவைத்து நடந்த சம்பவம் என்று பொலிஸார் கருதுகின்றனர்.

மேலும் காட்சிப் பரிசோதனை தொடர்கிறது மற்றும் விசாரணைகள் நடந்து வருகின்றன என்று காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  "நாங்கள் விசாரிக்கும் போது, ​​இன்று அப்பகுதியில் பொலிஸ் அதிகாரிகளின் பிரசன்னம் அதிகரித்திருப்பதை மக்கள் காணக்கூடியதாக இருக்கும்" என்று தெற்கு பகுதி கமாண்டர் இன்ஸ்பெக்டர் மைக் போமன் கூறினார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணில் பொலிஸைத் தொடர்புகொண்டு 220131/9471 என்ற கோப்பு எண்ணை மேற்கோள் காட்டி தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.