ஆக்லாந்தின் புறநகர்ப் பகுதியான பன்முரேயில் (Panmure) வீடு தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு 11 மணிக்கு முன்னதாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​பெங்காசி சாலையில் உள்ள குறித்த வீட்டில் தீ மளமளவென எரிந்து கொண்டிருந்ததாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய இன்று தீயணைப்பு புலனாய்வாளர்கள் முயற்சிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.