கடந்த ஜனவரி 2 ஆம்  கிறிஸ்ட்சர்ச்சில் மூன்று மாத குழந்தை இறந்தது தொடர்பாக ஒரு நபர் மீது கொலைக் குற்றச்சாட்டை பொலிஸார் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 34 வயதான நபர் இன்று பிற்பகல் கிறிஸ்ட்சர்ச் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதால், கைது செய்யப்பட்ட நபர் குறித்த கூடுதல் விவரங்களையோ, கருத்துகளையோ தெரிவிக்க முடியாது என பொலிஸார் தெரிவித்தனர்.