நேற்றிரவு கடலோர நகரமான ரக்லானில் (Raglan) நிறுத்தப்பட்டிருந்த காரில் ஒரு ஆணின் சடலம் மீட்கப்பட்டதை அடுத்து வைகாடோ பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து Wainui  சாலையில் உள்ள குடியிருப்பு ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு காட்சி ஆய்வு நடந்து வருகிறது.

நேற்று பிற்பகல் ரக்லானில் வெள்ளை நிற மிட்சுபிஷி லெக்னம் கார் (Mitsubishi Legnum) ஒன்றை கண்ட எவரும் இருந்தால் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடத்தைகளை கண்ட  எவரிடமிருந்தும் பொலிஸார் தகவல்களை கேட்க விரும்புகிறார்கள்.

தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணில் பொலிஸைத் தொடர்பு கொண்டு 220126/6493 என்ற கோப்பு எண்ணை மேற்கோள் காட்டி தகவல்களை வழங்குமாறு
துப்பறியும் இன்ஸ்பெக்டர் கிரஹாம் பிட்கெத்லி தெரிவித்தார்.

மேலும் 0800 555 111 என்ற எண்ணில் குற்ற ஒழிப்பு பிரிவினரை தொடர்பு கொண்டு தகவல்களை வழங்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.