இன்வெர்கார்கிலில் (Invercargill) ஒரு குழந்தை இறந்தது குறித்து துப்பறியும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நான்கு மாத குழந்தை கடந்த சனிக்கிழமை காலை பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஆக்லாந்தின் ஸ்டார்ஷிப் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.

சிகிச்சை பெற்று வந்த குறித்த குழந்தை நேற்று மருத்துவமனையில் உயிரிழந்தது.

இந்நிலையில் இன்வெர்கார்கில் எலிசபெத் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வசிப்பவர்களிடம் தொடர்ந்து விசாரணைக் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.