ஆக்லாந்து ஷாப்பிங் சென்டரில் கார் நிறுத்துமிடத்தில் இரவு நடந்த ஒரு மோதல் சம்பவத்தில் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு 9.45 மணியளவில் Clendon பூங்காவில் ஒரு தகராறில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதாகக் காவல்துறை கூறுகிறது.

அதிகாரிகள் வந்து பார்த்தபோது, ​ தலையில் பலத்த காயத்துடன் ஒருவரைக் கண்டனர்.

மேலும் இருவர் மிதமான காயங்களுடன் இருந்த நிலையில் மூவரும் மிடில்மோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மாங்கேரேவில் உள்ள மாசி சாலையில் உள்ள ஒரு வீட்டில் நேற்று நடந்த தாக்குதலுடன் இந்த சம்பவம் தொடர்புடையதாக இருக்கும் என பொலிஸார் கருதுகின்றனர்.

இது குறித்து செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்த சம்பவம் ஒருவருக்கொருவர் தெரிந்த நபர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு என தெரிவித்தார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடந்து வருகின்றன, மேலும்  தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணில் பொலிஸைத் தொடர்புகொண்டு, 220127/6632 என்ற கோப்பு எண்ணை மேற்கோள் காட்டி தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.