கிறிஸ்துமஸுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக Mt Roskill நபர் ஒருவரை கொலை செய்த வழக்கில் மேலும் இருவரை ஆக்லாந்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

23 வயதான பிரையன் ஜேம்ஸ் என்ற நபர் Glass வீதியில் உள்ள ஒரு வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார் மற்றும் உள்ளே இருந்த மேலும் இருவர் கத்தியால் தாக்கப்பட்டதில் காயமடைந்தனர்‌.

தெற்கு ஆக்லாந்தில் 42 வயது ஆண் ஒருவரைக் கைது செய்த பொலிசார், அவர் மீது கொலை மற்றும் காயம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

இன்று காலை கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குள், ஆபரேஷன் ஹஸ்கி விசாரணைக் குழு, 39 வயதுடைய மற்றொரு சவுத் ஆக்லாண்ட் நபரைக் கண்டுபிடித்து, கொலைக்குப் பின் துணையாக இருந்ததாக குற்றம் சாட்டியது.

பின்னர் ஒரு துப்பாக்கியும் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர் சட்டவிரோதமாக துப்பாக்கியை வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டார் என்று பொலிஸார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று கைது செய்யப்பட்ட இருவரும் நாளை ஆக்லாந்து மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.

ஆக்லாந்து நகர CIB இன் டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் ஸ்காட் பியர்ட் கூறுகையில், புலனாய்வுக் குழு பல கைதுகளைச் செய்திருந்தாலும், மேலும் கைதுகள் இடம்பெறலாம் அல்லது கூடுதல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என தெரிவித்தார்.

இந்த கொலை வழக்கில் பதினைந்து நாட்களுக்கு முன்பு நேப்பியரில் 33 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.