பரபரப்பான Tuajau தெருவில் ஒரு நபர் கத்தியுடன் சுற்றித் திரிவது கேமராவில் பதிவாகியதை அடுத்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

காலை 10 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தின் போது ஜார்ஜ் தெருவை தவிர்க்குமாறு போலீசார் மக்களை கேட்டுக் கொண்டனர்.

உள்ளூர் கடைக்காரர் ஒருவர் குறித்த தெருவில் ஒருவர் கையில் கத்தியை ஏந்தியவாறு மற்றொரு நபருடன் சண்டையிட்டுக் கொண்டிருந்ததாக தெரிவித்தார்.

மேலும் குறித்த மோதலின் பின்னர் ஆயுதம் ஏந்திய அந்த நபர் வாகனத்தில் ஏறி ஓட்டிச் செல்வதைப் பார்த்ததாகவும் கடைக்காரர் தெரிவித்தார்

ஒரு அறிக்கையில், போலீஸ் செய்தித் தொடர்பாளர், ஜார்ஜ் தெருவில் ஆயுதம் ஏந்திய ஆண் ஒருவர் தொடர்பில் புகாரளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

குறித்த வாகனம் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் விசாரணைகளின் பின்னர் இருவரும்  காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.