முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் ஊடகவியலாளர் விஸ்வசந்திரன் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகத்தில் இராணுவத்தினர் மூவர் முல்லைத்தீவு பொலிஸாரால் இன்றுகாலை (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை (27) முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் விஸ்வசந்திரன்மீது இராணுவத்தினரால் மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்திருந்தனர்.

இதில் காயமடைந்த ஊடகவியலாளர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார் . இன்றையதினம்(28) முல்லைத்தீவு நகரில் தாக்குதலை கண்டித்து கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

முன்னதாகவே இராணுவத்தினர் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.