பசுமை விவசாயம் என்ற கொள்கையிலிருந்து அரசாங்கம் பின்வாங்கவில்லை என விவசாய அமைச்சரான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இயற்கை விவசாயத்தினால் நாடு அழிந்துவிட்டதாக பாராளுமன்றத்தில் கருத்துக்கள் வெளியிடப்படும் ஒரே நாடு இலங்கை எனவும் அவர் தெரிவித்தார்.

பசுமை விவசாயத்திற்கு அரசாங்கம் மானியம் வழங்கும் என்றும், பசுமை விவசாயத்திற்கு அரசின் ஆதரவையும் தொழில்நுட்பத்தையும் வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

மக்களை உணரும் அரசாங்கம் என்ற ரீதியில் , இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளோம்.

இரசாயன உரத்தை இறக்குமதி செய்வதற்கு தனியாருக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும், எந்தவொரு அரச நிறுவனமும் இரசாயன உரத்தை இறக்குமதி செய்யாது என அவர் மேலும் தெரிவித்தார்.