எந்த புதிய கூட்டணியிலும் தன்னை இணைத்துக் கொள்ளப்போவதில்லை ஜேவிபி தெரிவித்துள்ளது.

ஜேவிபியின் டில்வின் சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டை அழித்த எந்த தரப்பினருடனும் இணைந்து செயற்படப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி மக்கள் கூட்டணியொன்றை உருவாக்கும் அவர்கள்  புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கான நிலைப்பாட்டை உருவாக்குவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டை அழித்த திருடிய தரப்புகளுடன் உறவை ஏற்படுத்திக் கொள்ளப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
திருடப்பட்ட சொத்துக்களை மீளப்பெற்றால் பல பிரச்சினைகளிற்கு தீர்வை காணமுடியும் என அவர் தெரிவித்துள்ளார்.