ஆக்லாந்தில் பயங்கரவாதியால் தாக்கப்பட்டவர்களில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்லாந்து நகர மருத்துவமனையில் உள்ள மற்றொருவரின் உடல்நிலை சீராக உள்ளது.

மிடில்மோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொருவர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டில் குணமடைந்து வருகிறார்.

பாதிக்கப்பட்டவர்கள் 29, 43, 60 மற்றும் 66 வயதுடைய நான்கு பெண்களும், 53, 57 மற்றும் 77 வயதுடைய மூன்று ஆண்களும் என காவல்துறை நேற்று உறுதி செய்தது.

வெள்ளிக்கிழமை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஆறு பேரில் ஐந்து பேர் கத்தியால் குத்தப்பட்டனர், மேலும் ஒருவரின் தோள்பட்டை சிதைந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.