ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் தொடர்புடைய அங்கொட லொக்காவின் உதவியாளர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இரண்டு துப்பாக்கிகள் மற்றும் டி-56 ரக வகை 18 ரவைகளுடன் குறித்த சந்தேக நபர் அங்கொட பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

 

அங்கொட லொக்காவுடன் சந்தேக நபருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் 38 வயதுடைய சந்தேக நபர் தொடர்பில் முல்லேரியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.