ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய சஹ்ரான் ஹஸீமிடம் பயிற்சி பெற்ற  யுவதி ஒருவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மாவனெல்ல பகுதியை சேர்ந்த 24 வயதுடைய  யுவதியே கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

குறித்த யுவதியை தடுத்து வைத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.