பிலியந்தலை, கல்கிசை, அங்குலான போன்ற பிரதேசங்களில் நேற்று (30) மேற்கொள்ளப்பட்ட 4 விசேட சுற்றிவளைப்புகளில் ஹெரோயின் ரக போதைப்பொருள் 9 கிராமுடன் 4 சந்தேக நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் கதிர்காமம் பிரதேசத்தில் 6 கிலோ கஞ்சாவை தன்னகத்தே வைத்திருந்த 32 வயதான நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.