கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உட்பட 14 நாடுகளின் விமானங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தடைவிதித்துள்ளது.

விமான போக்குவரத்தின் முக்கிய பகுதியாக ஐக்கிய அரபு அமீரகம் திகழ்கின்றது. குறிப்பாக துபாய் பல்வேறு நாடுகளை இணைக்கும் மையமாக திகழ்கின்றது.

இதனால் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதியில் இருந்து இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கான விமான சேவையை ஐக்கிய அரபு அமீரகம் தடைசெய்துள்ளது.

கடந்த 19 ஆம் திகதி, ஜூன் 27 ஆம் திகதியில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உட்பட 14 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இந்த நிலையில் தற்போது தடைவிதித்துள்ளது.

இந்த நிலையில், தற்போதும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரழிவுகள் அவசரநிலை மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தியாவுடன் பாகிஸ்தான், இலங்கை, லைபீரியா, நமிபியா, சியாரா லியோன், காங்கோ, உகாண்டா ஜாம்பியா, வியட்நாம், பங்களாதேஷ், நேபாளம், நைஜீரியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து விமான சேவைக்கும் தடையை நீட்டித்துள்ளது.

ஆனால் சரக்கு விமானம், தொழில், வாடகை விமானம் ஆகியவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.