பால் மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சிமெந்து விலையை அதிகரிக்க இதுவரை எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தைப்படுத்தல், கூட்டுறவு சேவைகள் சந்தை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண இதனை தெரிவித்துள்ளார்.

இந்த பொருட்களை பொதுமக்களுக்கு தற்போதுள்ள விலையில் விற்பனை செய்வதற்காக அரசாங்கம் ஏற்கனவே, சில நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளது என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.