மொறவக்க − கொஸ்நில்கொட அரச வைத்தியசாலையின் கொவிட் தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள பகுதிக்குள் விசர் நாய் ஒன்று நுழைந்து, அங்கு தங்கியிருந்த நோயாளர்களை கடித்து காயப்படுத்தியுள்ளது.

அந்த சம்பவத்தில் மூன்று பெண்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ,இந்த வைத்தியசாலையின் குறித்த வாட்டில் வெளிநாட்டிலிருந்து வருகைத் தந்த 18 பெண்கள் அடங்களாக 38 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் சிலர் வீடு திரும்ப தயாராகி இருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.

மேலும், வைத்தியசாலை ஊழியர்கள் நாயை பாரிய பிரியத்தனத்திற்கு மத்தியில் விரட்டியுள்ளனர்.

வைத்தியசாலைக்கு வெளியில் வைத்து, அங்கிருந்த சிலர் நாயை அடித்து கொன்றுள்ளனர்.