கிறிஸ்ட்சர்ச் மாலின் (Christchurch mall)கார் பார்க்கிங்கில் குழய்களை அகற்றும் போது கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று பிற்பகல் 2.40 மணியளவில் ரிக்கார்டனில் உள்ள புஷ் இன் மையத்தில் நடந்த சம்பவத்திற்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

கிறிஸ்ட்சர்ச் மெட்ரோ பகுதி கண்காணிப்பாளர் லேன் டோட் கூறுகையில், பாதிக்கப்பட்டவர் 57 வயதான நபர்.

சம்பவம் நடந்தபோது அவர் மாலைச் சுற்றியுள்ள குழாய்களை அகற்றிக் கொண்டிருந்தார்.

ஒரு எஸ்யூவியின் டிரைவர் அவரை அவதானிக்காமல் காரை செலுத்தியபோது இதில் மோதுன்டு குறித்த நபர் உயிரிழந்ததாக தெரிவித்தார்.

மேலும் டோட் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் சக ஊழியர்களுக்கும் தனது இரங்கலைத் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக மால் நிர்வாகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

அந்த பகுதி சுற்றி வளைக்கப்பட்டதுடன் வொர்க் சேஃப் (Work safe) மரணம் குறித்து ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

"நாங்கள் ஆரம்ப விசாரணைகளை மேற்கொள்கிறோம், இது எங்கள் அடுத்த படிகளை தீர்மானிக்கும்" என்று ஒரு Work safe செய்தித் தொடர்பாளர் கூறினார்.