டோகோரோவாவிலிருந்து (Tokoroa) காணாமல் போனதாகக் கூறப்படும் இரண்டு வேட்டைக்காரர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை இரவு முதல் அவர்கள் வேட்டையாடும் பயணத்திலிருந்து திரும்பாததால் புதன்கிழமை காலை இவர்கள் காணாமல் போயுள்ளதாக புகாரளிக்கப்பட்டது என பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் அவர்கள் நன்றாக இருப்பதாக பொலிஸை தொடர்பு கொண்டதாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்