ஆறு வாரங்களாக வெலிங்டன் இடைநிலை பள்ளி மாணவர்களை இனிப்புகள் வழங்கும் ஒரு நபர் அணுகியுள்ளார்.

கடந்த ஆறு வாரங்களில் மூன்று தடவைகள் பள்ளியின் மேற்கே உள்ள லியார்டெட் செயின்ட் அருகிலுள்ள பூங்காவில் குறித்த நபர் காணப்பட்டுள்ளார்.

முதல் இரண்டு சம்பவங்களில், அந்த நபர் லாலிகளை வழங்கி பின்னர் குழந்தைகளின் பெயர்களைக் கேட்டார்.இந்நிலையில் அவர் இன்று காலை ஒரு மாணவரைப் பிடிக்க முயன்றபோது அந்த மாணவர் தப்பி ஓடிவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து மாணவர் அதிபர் டோபி ஸ்டோக்ஸிடம் முறையிட்ட நிலையில் அவர் மாணவர்களின் பெற்றோருக்கு மின்னஞ்சல் அனுப்பினார்.

இதனை தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.

மேலும் பொலிஸார் நாளை அப்பகுதியில் மேற்பார்வை செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.