இலங்கையின்  7ஆவது அதிவேக வீதியான ருவன்புர அதிவேக வீதியின் நிர்மாணப்பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் இன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.

இதன்படி ,கொரோனா பரவல் காரணமாக பிரதமர் அலரிமாளிகையில் இருந்து நவீன தொழில்நுட்பம் ஊடாக அந்த நிர்மாண பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளதாக பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த வீதியின் நிர்மாணப்பணிகள் தென் அதிவேக வீதியின் கஹதுடுவ உள்ளக இடமாறல் பகுதியில் ஆரம்பித்து இங்கிரிய – இரத்தினபுரி ஊடாக பெல்மதுளை வரை சென்றடையவுள்ளது.