கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக எதிர்வரும் நிலைமையை கருத்திற் கொண்டு பயணக் கட்டுப்பாடுகள் அல்லது நாடு முழுவதும் ஊரடங்கை அமுல்படுத்துவது தொடர்பில் தீர்மானம் இன்று மாலை வேளையில் கூட எடுக்கலாம் என  ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தற்போது காணப்படும் நிலையில் ஊரடங்கு அவசியமற்றது என ஊடகத்துறை அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.