இலங்கை

ஐந்தாண்டுகளுக்கு முன்னர், இலங்கையில் பொதுமக்களுக்கு எதிரான மிக மோசமான தாக்குதலில் பாதிக்கப்பட்ட 279 பேர் விடயத்தில், "பொறுப்புப் பற்றாக்குறையை" சரிசெய்து நீதியை வழங்குமாறு, ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு படுகொலைக்கு யார் காரணம் என்பதை தீர்மானிக்க "முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை" நடத்தப்பட வேண்டும் என்று நாட்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட தூதுவரான Marc-Andre Franche கொழும்பில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் வலியுறுத்தினார்.

குறித்த சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தாங்கள் இன்னும் நீதிக்காக காத்திருப்பதாக கூறுகின்றனர். 1972ல் இருந்து 100,000க்கும் அதிகமான உயிர்களை பலிகொண்ட பயங்கரமான இனக்கலவரம் முடிந்து, ஒரு தசாப்தத்திற்குப் பிறகு தீவிற்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் உட்பட 45 வெளிநாட்டவர்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.

போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், ஊழல் அல்லது அதிகார துஷ்பிரயோகம் என கூறப்படும் பொறுப்புக்கூறல் பற்றாக்குறையால் இலங்கை தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறது. தாக்குதலைத் தடுக்கத் தவறியமைக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது உயர்மட்ட அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள போதும், பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் நீதியை நாடுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணையை நடத்தி, முந்தைய விசாரணைகளின் முழு முடிவுகளையும் வழங்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் கோரியுள்ளது என்றும் Marc-Andre Franche குறிப்பிட்டுள்ளார்.