Tauranga மருத்துவமனைக்கு தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அச்சுறுத்தலை அடுத்து மருத்துவமனை ஐந்து மணிநேரம் பூட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இன்று நண்பகலுக்கு சற்று முன்னர் இந்த அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்பு வந்ததாக டௌரங்கா மருத்துவமனை கூறியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனை பூட்டப்பட்டது.

ஒவ்வொரு நுழைவாயிலிலும் ஆயுதமேந்திய அதிகாரிகள் பார்வையாளர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து மாலை 4.40 மணியளவில், சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் மருத்துவமனை மீண்டும் திறக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்